Posts

Showing posts from April, 2020

தினமலர் என் பார்வை

Image
மீண்டு வருவோம் கவலை வேண்டாம்     முனைவர்  சவுந்தர மகாதேவன், தமிழ்த்துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி, 9952140275 பேரிடர் பாரதத்தை அழுத்தினாலும் மீண்டு வருவோம் என்கிற நம்பிக்கை நம்முள் துளிர்க்கிறது. இந்தக் கொரோனா நாட்கள் நிறைய இழப்புகளையும், நிறைய இறப்புகளையும் உலகிற்கிற்குத் தந்து நம்மை வீட்டுக்குள் முடக்கினாலும் தண்ணீர் வாளிக்குள் அமிழ்த்திய பந்து எப்படி அமிழ்த்திய கரங்களைத் தள்ளிக்கொண்டு மேலே வருமோ அவ்வாறு மேலே வருவோம் என்கிற நம்பிக்கையையும் தந்திருக்கிறது. நம்பிக்கைதானே வாழ்க்கை: 1876 முதல் 1878 வரை தொடர்ந்த தாது வருஷத்துப் பஞ்சத்தாலும் அது தந்த பசிபட்டினியாலும் கொடிய நோயாலும் இந்தியாவில் ஐம்பதுலட்சம் மக்கள் இறந்தார்கள். 1900 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஏற்பட்ட வரலாறு காணாத வறட்சியின் விளைவாய் உண்ண உணவில்லாமல் 3.25 மில்லியன் மக்கள் இறந்தார்கள். 1943 இல் வங்காளத்தில் ஏற்பட்ட பஞ்சத்தாலும் தொற்றுநோயாலும் 3.5 மில்லியன் மக்கள் இறந்தார்கள். 2004 இல் நம் வாழ்நாளில் கண்டறியாத மிகப் பெரிய நிலநடுக்கத்தை இந்தியப் பெருங்கடலில் கண்டோம், ரிக்டர் அ...

நம்பிக்கை

Image

ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுகள்

Image

நம்பிக்கை

Image

தினமலர், என் பார்வை கட்டுரைகள்: செளந்தர மகாதேவன்

Image

தினத்தந்தி நாலாம்பக்கக் கட்டுரைகள்: செளந்தர மகாதேவன்

Image

உங்களுக்காக எப்போது வாழப்போகிறீர்கள்? சௌந்தர மகாதேவன்

Image
உங்களுக்காக எப்போது வாழப்போகிறீர்கள்? பேராசிரியர் சவுந்தர மகாதேவன்,தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி, 9952140275 காலில் சக்கரம் கட்டிக்கொண்ட மாதிரி வாழ்க்கை முழுக்க ஒரே ஓட்டம், எந்தநேரம் பார்த்தாலும் செக்குமாடு மாதிரி ஏதோவொரு உழைப்பு, நாம் கடிகாரம் கட்டியிருந்தோம் என்பதைவிட நம்மைக் கடிகாரம் கட்டிக்கொண்டிருந்ததோ என்று எண்ணுமளவுக்குப் பரபரப்பான வாழ்க்கை, வேண்டிய மட்டும் பணம் சம்பாதித்தாகிவிட்டது. பங்களா, கார், வங்கிக் கையிருப்புகள் எல்லாம் உண்டு!   மகன், மகள் எல்லோருக்கும் திருமணம் செய்தாகிவிட்டது. நம் தேவைகள் எல்லோருக்கும் போதும் என்றாகிவிட்டது, கட்டடம் கட்டி முடித்தவுடன் கழற்றி ஓரமாய் வைக்கப்படும் சாரக் கம்புகளைப் போல் நம் பிள்ளைகளுக்கே நாம் பாரமாகிப் போய்விட்டமோ என்கிற நினைப்பு கூட இப்போதெல்லாம் அவ்வப்போதுவந்து   தலைதூக்கத் தொடங்குகிறது. யார் துணை? எப்போதும் ஏதோவொரு வெறுமை! எதையோ இழந்த உணர்வு! இன்னும் ஏன் எதைநோக்கியோ பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்கிற அசதி தோய்ந்த கேள்விகள் சிலருக்குத் தலைதூக்கலாம். வீறுகொண்டு எழவோ சிகரம் நோக்கி ...

வாழ நினைத்தால் வாழலாம் * முனைவர் சௌந்தர மகாதேவன்

Image