தினமலர் என் பார்வைக் கட்டுரை: சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி
மகிழ்ச்சி எனும் மலர்ச்சிப் பூ முனைவர் சவுந்தர மகாதேவன், தமிழ்த் துறைத் தலைவர் மற்றும் கலைப்புல முதன்மையர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி, 9952140275 நாம் அணியும் எல்லாப் பொன்னகைகளையும் விடவும் அழகானது நம் முகம் சிந்தும் இனிமையான புன்னகை. மலர்ச்சியும் மகிழ்ச்சியும் நம் வாழ்நாளை வெகுவாக நீட்டிக்கிறது. ஒவ்வொரு விடியலிலும் மகிழ்வலைகள் நம்முள் எழ என்ன செய்யவேண்டும்? வெறுப்பை மறுத்துச் சிரிப்பை நம் உள்ளத்திற்குள் ஊற்ற என்ன செய்யவேண்டும்? ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவித்து வாழ்பவனுக்கு அவன் மனம் அருவிபோல் பொங்கத்தான் செய்யும். அந்தந்த கணத்தை அனுபவித்து வாழ்பவனுக்கு இந்த வினாடி மட்டுமன்று எல்லா வினாடிகளும் அருமையானதுதான். வளர்ந்த செடியால் தொட்டியையும் துளைத்துக் கொண்டு மண்ணில் வேர்பரப்பமுடிகிறது. சென்டிமீட்டர்களால் வளர்ந்ததாய் காட்டிக்கொண்டிருக்கும் நம்மால் அவ்வாறு ஏன் முடியவில்லை? வேதனைப் பரப்பில் நம் வேர...